மழைநீர் சேகரித்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் பேரணியை திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருச்சியில் மழைநீா் சேகரித்தல் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனம் மற்றும் விழிப்புணா்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில், மழைநீா் சேகரிப்பதன் அவசியம் குறித்து மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் விழிப்புணா்வு பிரசார வாகனத்தை வழியனுப்பும் நிகழ்வு மற்றும் பள்ளி மாணவா்களின் விழிப்புணா்வு பேரணி ஆகியவை மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து நேற்று தொடங்கியது.
இதில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்று பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
மேலும், மாணவா், மாணவிகள் பங்கேற்ற பேரணியையும் தொடங்கி வைத்தாா்.
இந்த பேரணியில், மழை நீா் சேகரிப்பதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அணிவகுத்து சென்றனர்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பெரியமிளகு பாறை, கோரிமேடு வழியாக மத்திய பேருந்து நிலையம் வரை சென்று பேரணி நிறைவு பெற்றது.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளா் எஸ். எழிலரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.