Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் மன்னார்குடி ராஜகோபாலசாமிஅரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்.

0

 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் ஆனது மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த முகாமை தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் தனராஜ், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலைமங்கலம் பாலு மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் ஆகியோர் ரத்ததான முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

இந்த முகாமில் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரியின் முதல்வர் முனைவர். ராஜேந்திரன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் வரதராஜன், திருவாரூர் மாவட்ட யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மன்னார்குடி கிளையின் தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த ரத்ததான முகாமில் மன்னார்குடி அரசு கல்லூரியை சேர்ந்த 200 மாணவ மாணவிகளுக்கு இரத்த வகைகள் கண்டறியப்பட்டு அதில் 50 மாணவ மாணவிகள் ரத்த தானம் செய்தனர். இந்த முகமானது மன்னார்குடி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்த முகாமை மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர். ராஜா மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்து திரும்பட ஒருங்கிணைத்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.