Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 17 வயது சிறுமி காதலன் முன் பாலியல் பலாத்காரம்.எஸ் ஐ உள்ளிட்ட 4 காவலர்கள் கைது.

0

 

திருச்சி முக்கொம்பு காதலனுடன் அந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எஸ் ஐ உள்ளிட்ட 4 காவலர்கள் மீது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட பயிற்சி எஸ்ஐ உட்பட 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 பேரையும் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருக்கக்கூடிய முக்கிய சுற்றுலா தளங்களில் முக்கொம்பு ஒன்றாகும். இங்கு திருச்சியில் இருப்பவர்கள் மட்டுமில்லாமல் சுற்று பகுதியில் இருப்பவர்களும் வருகை தருவார்கள். அந்தவகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 வயது சிறுமி தன்னுடைய காதலனுடன் முக்கொம்பு வந்துள்ளார்.

அந்த நேரத்தில் பயிற்சி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் தனது சக காவலர்கள் நண்பர்களான பிரசாத், சித்தார்த், சங்கரபாண்டி ஆகியோர்கள் குடிபோதையில் அங்கு வந்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த 17 வயது சிறுமியை காதலன் முன்பே பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, 17 வயது சிறுமி முக்கொம்பூர் அருகே உள்ள ஜீயபுரம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்திருந்தார்.

காவலர்கள் மீதே புகார் அளிக்கப்பட்ட விவகாரம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரிடம் சென்றது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணையில் சிறுமியை தொந்தரவு செய்தது உண்மை என தெரியவந்ததை அடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போக்ஸோ வழக்கு பதிவு செய்து, கைது செய்ய உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், பயிற்சி எஸ்ஐ உட்பட 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.