திருச்சியில் மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரி துறை சார்பில்
சுஜ்மா திட்டத்தின் கீழ் தூய்மை பணி.
ஆணையர் தொடங்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் சுஜ்மா திட்டத்தின் கீழ் தூய்மை பணியினை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி நீதிமன்றம் அருகில் மத்திய ஜிஎஸ்டி மற்றும் வணிகவரித்துறையின் சார்பில் ஆணையர் அனந்த கிருஷ்ணன் தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த பணியில் ஜிஎஸ்டி மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் சேவை வரி அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.