Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாஜக கூட்டணியில் இருந்து விலகி கொள்வது என்ற சிறப்பான முடிவெடுத்த அதிமுக பொது செயலாளருக்கு திருச்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பாரட்டு.

0

 

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அறிவுறுத்தலின்படி,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும். முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று (27.9.23) காலை 10மணியளவில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இரண்டு கோடிக்கும் அதிகமான தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விலகி கொள்வது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றிய கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூட்டம் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்கள் தெரிவித்தும்,

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு ஆகியவற்றை 4 சட்டமன்ற தொகுதியிலும் சிறப்பாக மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி, மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், கழக அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சுப்பு, மாவட்ட கழக பொருளாளர் சேவியர், மாவட்ட கழக இணை செயலாளர் இந்திராகாந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பரமேஸ்வரி முருகன், மல்லிகா சின்னசாமி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ரமேஷ், புல்லட் ஜான், பேரூர் கண்ணதாசன், அறிவழகன், ஏவூர் நாகராஜன், அன்பு பிரபாகரன், அன்னை கோபால், பொன் காமராஜ், பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், சரோஜா இளங்கோவன், நகர கழக செயலாளர்கள் சுப்ரமணியன், அமைதி பாலு, ஒன்றிய கழக செயலாளர்கள் ஆதாளி, செல்வராஜ், முத்துகருப்பன், எல்.ஜெயக்குமார், ஜெயராமன், குமரவேல், பிரகாஷவேல், ஜெயக்குமார், ஜெயம், நடராஜன், அழகாபுரி செல்வராஜ், ராம் மோகன், வெங்கடேசன், கடிகை ராஜகோபால், பேரூராட்சி கழக செயலாளர்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன், துரை சக்திவேல், திருஞானம் பிள்ளை, சம்பத்குமார், ராஜேந்திரன், ராஜாங்கம், பகுதி கழக செயலாளர் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், நெடுமாறன், ஶ்ரீரங்கம் ரவிசங்கர், மருதை, ஈஞ்சூர் ராமு, நடேசன், கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, சமயபுரம் மணிகண்டன், எட்டரை அன்பரசு, வழக்கறிஞர் பொன்முருகன், ஶ்ரீரங்கம் ஆன்ந்த், அரவிந்த், திருப்புகழ், செந்தில்குமார், மைக்கேல், பிரதீப், சுரேஷ், போர்வெல் ரெங்கராஜன், சிராஜீதீன், வட்ட செயலாளர்கள் கலைமணி, பொன்னர், தமிழரசன், மகேஷ்வரன், கொளஞ்சி, ராஜு, சேகர், மனோகரன், செந்தில், பிரகாஷ், வி.என்.ஆர். செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.