அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது திருஉருவசிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர்கள் 47 வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன்,தொட்டியம் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், நாகநாதர் சிவகுமார்,கால் நாயக் சதீஷ், மதியழகன், சங்கர், தருண், கைலாஷ் ராகவேந்தர், மீரான், பக்ருதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.