திருச்சியில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொது குழு நடைபெற்றது.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும்.
தமிழக அரசுக்கு கோரிக்கை.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். அழகிரிசாமி வரவேற்றுப் பேசினார். மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மாநில பொருளாளர் இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள்
முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் அருள், சுந்தரராஜன், சத்தியமூர்த்தி, நடராஜன், ரவிச்சந்திரன், பீட்டர் ராஜா,ராஜு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியல், முதுகலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியல் தயார் செய்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் செல்ல விரும்புவோர். அல்லது மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு செல்ல விரும்புவார் என்ற விருப்பத்தை ஒவ்வொரு ஆண்டும் தெரிவிக்கும் வகையில் நடைமுறையை பின்பற்ற வேண்டும். விகிதாசாரத்தின் அடிப்படையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மின் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும். அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பராமரிக்கும் வகையில் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்