Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அன்னை தொண்டு நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் பெண் தொழில் முனைவோர்களை உயர்த்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

0

 

பெண் தொழில் முனைவோர்களை உயர்தல்” என்பதை நோக்கமாக செயல்படும் அன்னை தொண்டு நிறுவனத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா

அன்னை தொண்டு நிறுவனத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி
விழாவையொட்டி “பெண் தொழில் முனைவோர்களை உயர்தல்” ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி அன்று அன்னை குழுமத்தின் நிறுவனர் ஞானசேகரன் முன்னிலையில் நடத்தப்பட்டது.

அன்னை தொண்டு நிறுவனமானது மிகவும் பின்தங்கிய மக்களுக்கு தூய்மையான சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக தமிழ்நாடு மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்கள் மற்றும் ஒருமித்த கருத்துடைய
பிற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சி அன்னை குழுமத்தின் நிறுவனர் ஞானசேகரன் மற்றும் அதன் அறங்காவலர்கள் மாயழகு, மாதவன், Cynergic Life Science Pvt. Ltd.ன் மேளாண்மை இயக்குநர் அமீர் உமர் கய்யாம், Bass biz நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தணிக்கையாளர் அந்தோனி, பெண் தொழில் முனைவோர்கள், அன்னை கலைக்குழுவினர், அன்னை பணியாளர்கள், மற்றும் அன்னை நிறுவனத்தின் சுய உதவி குழுக்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக அன்னை தொண்டு நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்வாகத்துறை இயக்குநர் மேகலா வரவேற்புரை வழங்கினார்.

அன்னை தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் மாதவன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சட்ட ரீதியான ஆலோசனைகள் சிறப்பு விருந்தினர்களால் அளிக்கப்பட்டது. ஏற்புரை மற்றும் மின் சந்தைக்கான தளத்தை துவக்கி அதன் செயல்பாடுகளை அன்னை குழுமத்தின் நிறுவனர் ஞானசேகரன் விளக்கினார். முடிவில் அன்னை தொண்டு நிறுவனத்தின திட்ட இயக்குநர் பானு நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.