Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடிக்கு புரட்சித்தமிழர் பட்டம். மாநாட்டில் 32 தீர்மானங்கள் ஓர்மானதாக நிறைவேற்றம்.

0

அதிமுகவின் வீர வரலாறு பொன்விழா எழுச்சி மாநாடு, மதுரை அருகே வலையங்குளத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டு திடல் முன் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் மாநாட்டு பந்தலை, ரிப்பன் வேட்டி திறந்து வைத்ததோடு நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த அதிமுகவின் 51 ஆண்டு வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா, பொதுச்செயலாளர் கே.பழனிசாமி ஆகியோரின் அரசியல் வரலாறு, அதிமுக ஆட்சியின் சாதனைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழி என்ற பெயரில் மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில், அக்கட்டியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்ற பட்டம் வழஙக்ப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட சர்வ சமய பெரியோர்கள், எடப்பாடி பழனிசாமியின் மக்கள் சேவையைப் பாராட்டி புரட்சித் தமிழர் என்ற பட்டத்தை வழங்கினர்.

கீழ்க்கண்ட 32 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கும், அதிமுக தொண்டாகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வரும் எடப்பாடி வாழ்த்தும் நன்றியும் இதயப்பூர்வமான பாராட்டுகளும்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக எடப்பாடி திகழ்கிறார். அம்மா அவர்களின் அரசியல் வாரிசு என நல்லாட்சியைத் தந்தவர். நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்த பொதுச் செயலாளர்.
அதிமுவிற்கு இரண்டு கோடிகளுக்கு மேல் உறுப்பினர் சேர்க்கைக்காக அதிமுகவின் மாவட்ட / மாநில / பிற மாநில நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பாராட்டும் நன்றியும்.

இந்திய திருநாட்டிலேயே 2 கோடிக்கும் மேல் உறுப்பினர் எண்ணிக்கை கொண்ட ஒரே இயக்கம் அதிமுக.

திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழிக் கல்விக்காக மத்திய அரசை வலியுறுத்தல்.

தமிழை அரசியல் அமைப்புச் சட்டம் மூலம் ஆட்சி மொழியாக்க மத்திய அரசை வலியுறுத்தல்.

புதுச்சேரியை மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல்,

மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசுக்கு கண்டனம்.

மகளிர் உரிமைத் தொகை வழங்க கட்டுப்பாடுகள் பல விதித்த தமிழக அரசுக்கு கண்டனம்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு கண்டனம்.
இந்தியாவிலேயே தமிழகத்தை அதிக கடன் வாங்கிய மாநிலமாக மாற்றிய தமிழக அரசுக்கு கண்டனம்.

விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்க தமிழக அரசுக்கு கண்டனம்.

மேகதாது அணை கட்டும், அவர்களது கூட்டணி கட்சி காங்கிரஸ் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறும் தமிழக அரசை கண்டித்து.
கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் தராத தமிழக அரசுக்கு கன்டணம்

’நினைத்ததை முடிப்பவன் நான்’ என புரட்சித் தலைவர் பாடினார். அதன்படி நினைத்ததை முடித்தவர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தில்தொழில் வளத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.

நெசவாளர்களுக்கு எதிரான விரோதப் போக்கை கடைபிடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.

உள்ளாட்சி அமைப்புகளின் நிதியை அரசே எடுத்து, வேறு பல திட்டங்களுக்கு செலவழிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.

காவிரி குண்டாறு நதிகளின் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசைக் கண்டித்து தீர்மானம்.

கோதாவரி காவிரி இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

பட்டியலின மக்களுக்கான நிதியை வேறு பல திட்டங்களுக்குப் பயன்படுத்தும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.

கடலில் பேனா சின்னம் அமைக்கத் துடிக்கும் தமிழக அரசை கண்டித்து தீர்மானம்.

மணிப்பூர் மாநில அரசையும் மத்திய அரசையும் அங்கு அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தல்,

கழக நிர்வாகிகள் மீது போடும் பொய் வழக்குகளை எதிர்கொண்டு வெல்வோம் என சூளுரைத்து தீர்மானம்.

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முடக்காமல் செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

ஜெயலலிதாவிற்கு சட்ட சபையில் இழைத்த (சேலையைப் பிடித்து இழுத்த) அநீதியை மறைக்கும் மு.க. ஸ்டாலினை கண்டித்து தீர்மானம்.

கட்சியிலிருந்து துரோகிகளை களை எடுத்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு.

மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.

2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமி வகுத்து தரும் திட்டங்களின் படி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய சூளுரை.

அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தமிழக முதல்வராக்க சபதம் ஏற்போம்
இந்த தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்ப்பட்டன.

மாநாடு அறிவித்த நாள் முதல் இரண்டு மாத காலமாக மிகவும் துல்லியமாக பிளான் செய்து 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களை திரட்டி வந்த திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமாரை கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டினார்.

திருச்சியில் இருந்து எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சிந்தை முத்துக்குமார் ஏற்பாட்டின் பேரில் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் மதுரை மாநாடு சென்று திரும்பினர்.
மாநாடு என்ற அனைத்து தொண்டர்களுக்கும் காலை டிபன்,மதியம் மட்டன் பிரியாணி சிக்கன் 65 யுடன் வழங்கினார்.
யாரும் அலையாத வகையில் குடிநீர் பாட்டில்களும் வழங்கி சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.

எடத்தெரு தொழிலதிபர் எம்.கே.குமாரும் 10 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்களை அழைத்து சென்று வந்தார்.

Leave A Reply

Your email address will not be published.