திருச்சியில் ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் குமரேசன் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி.
திருச்சி உறையூரில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவூட்டும் வகையில் ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் தற்காப்பு கலைக்கூடம் சார்பாக சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் 3வது மாநில அளவிலான சிலம்ப போட்டியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி. உறையூர் காவல் ஆய்வாளர் மற்றும் கோட்ட தலைவர் நாகலட்சுமி நம்பி, சிலம்ப கூடம் ஆசான் அ.குமரேசன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் போட்டியினை துவக்கி வைத்தனர்.
இந்தப் போட்டியில் 15 மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிக்கு ஸ்டார் கிங்ஸ் மருத்துவமனை மருத்துவர் ராஜரத்தினம் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். முதல் பரிசை திருச்சி பொன்மலை மண்ணை மகாலிங்கம் சிலம்ப கூடம், இரண்டாம் பரிசினை கும்முடிபூண்டியைச் சேர்ந்த ஏழுமலை சிலம்ப கூடமும், மூன்றாம் பரிசை திருநெல்வேலியைச் சேர்ந்த கலமாஞ்சா 64 சிலம்பக்கூடம் பெற்றனர். போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் சிலம்ப கூட ஆசான் அ.குமரேசன் நன்றியுரை வழங்கினார்.