Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பின் சார்பில் தமிழக முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

0

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்

பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல் கட்டமாக திருச்சியில் நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.

தொடர்ந்து இதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகளுக்கு பள்ளி பேக் மற்றும் உபகரணங்கள் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் வழங்கப்பட உள்ளது.

 


இந்நிகழ்ச்சி பன்முக கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பகுர்தீன் அலி அகமது, ஒருங்கிணைப்பில், நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில், பொருளாளர் பாலமுருகன், மாநில துணை ஒருங்கணிப்பாளர் சுபேர்தீன், மாநில செயலாளர் திருச்சி ரமேஷ், மாநில மகளிர் அணி தலைவி பொன்முடி, மாநில ஆலோசகர் குழு வீரேந்திர குமார் ஆகியோரின் முன்னிலையில்,

திருச்சி மாவட்ட தலைவர் NT.முருகன்,துணைத் தலைவர் அன்வர்தீன், செயலாளர் ஐயப்பன், துணை செயலாளர் மோகன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பார்களாக நாடக நடிகர் சங்க தலைவர் அலெக்ஸ் ராஜா, தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் பண்ணை சிங்காரவேலன், S2S வெப் டெக்னாலஜி உரிமையாளர் சரவணகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் கரண் லூயிஸ், மாநில மக்கள் தொடர்பாளர் டூயட் சசிகுமார், மாநில துணைச் செயலாளர் கார்த்திகேயன், இசைமைப்பாளர் மயில்வாகனம், திருச்சி மாவட்ட மகளிர் அணி துணை தலைவி காலாவதி, மகளிர் அணி கொள்கைப்பரப்பு செயலாளர் LR.சுகந்தி, சரவணகுமார்,பீர்முகமது மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.