Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருச்சி மாநகர் காங்கிரஸ் சார்பில் மெலுகுவர்தி ஏந்தி போராட்டம்.

0

 

 

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திருச்சி மாநகர் காங்கிரஸ் சார்பில் நேற்றுமாலை   மெலுகுவர்தி ஏந்தி போராட்டம்.

 

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் ஜவகா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் மணிப்பூா் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெறும் கலவரத்தில் பழங்குடி இனப்பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளைக் கண்டிப்பது. மணிப்பூா் கலவரத்தை அடக்க இயலாத மத்திய, மாநில பாஜக அரசுகள் பதவி விலக வேண்டும்.. கலவரத்தை உடனடியாக அடக்குவதுடன், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்.

கலவரத்தில் பாலியல் கொடுமை செய்தோா் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில் மாவட்டப் பொருளாளா் ராஜா நசீா், சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவா் பேட்டரிக் ராஜ்குமாா், மாவட்ட செயலாளர் அண்ணா சிலை விக்டர், மாமன்ற உறுப்பினா்கள் , சோபியா விமலா ராணி, மாவட்டத் துணைத் தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், சிக்கல் சண்முகம், சத்தியநாதன், மகளிரணி மாநகர மாவட்டத் தலைவி ஷீலா, ஐஎன்டியுசி துணைத் தலைவா் சம்சுதீன், மீனவரணித் தலைவா் தனபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் மெழுகுவா்த்தி ஏந்தி கலந்து கொண்டனா்.

Leave A Reply

Your email address will not be published.