திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி எடுத்த பள்ளி மாணவ மாணவிகள்.
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவப் படத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி, மாமன்ற உறுப்பினர் சுரேஷ், ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் கல்வி வளர்ச்சி நாள் முன்னிட்டு பள்ளி மாணவ , மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது .
முடிவில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் பள்ளியை தூய்மையாக வைப்போம் என உறுதி எடுத்தார்கள்.