Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாடு குறுக்கே வந்ததால் விபத்து.கல்லூரி மாணவர் பரிதாப சாவு.

0

 

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி வடக்கு தேனீர் பட்டியை சேர்ந்தவர் குமார் இவரது மகன் லோகேஷ்
(வயது 22) இவரும் அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்னும் கௌதம் (20) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே சென்ற பொழுது திருச்சியில் இருந்து திருவாரூர் நோக்கி முன்னாள் சென்ற கார் மாடு குறுக்கே வரவும் மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியப் போது பின்னால் வந்த மீது மோதியது இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த கௌதம் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் கௌதமிற்கு பலத்த அடியும் லோகேஷ்க்கு லேசான காயம் ஏற்பட்டது. பலத்த அடிபட்ட கௌதமை காப்பாற்றி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பறிசோதித்த மருத்துவர்கள் கவுதம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் கவுதமின் உடலை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து லோகேஷ் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சர்புதீன் மகன் தமிம்அன்சாரி (47) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.