புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் மணிசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார்
பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் அவர்களின் ஆலோசனைப் படியும் புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் (26.06.2023) அன்று நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் மணிசங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல், ஜெ.ஜெ. கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு. சுப்பிரமணியன், ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பரசுராமன், இந்தியன் ரெட் கிராஸ் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ராஜா முகமது, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் கிஷோர், புதுக்கோட்டை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் முனைவர் தயாநிதி மற்றும் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் 87 மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.