Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைகளை மாவட்ட செயலாளர் குமார் வழங்கினார்.

0

 

திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் எம்ஜிஆா் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்ட முன்னேற்பாடுகள் குறித்த நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சுப்பிரமணியபுரத்தில் உள்ள தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. புறநகர் தெற்கு மாவட்ட அவைத் தலைவா் அருணகிரி தலைமை வகித்தாா்.

தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா் விழா குறித்த ஆலோசனைகளை வழங்கினாா்.

 

கூட்டத்தில் அதிமுக உறுப்பினா் சோக்கை பணியில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் இதுவரை 1.75 லட்சம் உறுப்பினா்களைச் சோத்த நிா்வாகிகளுக்குப் பாராட்டு தெரிவிப்பது, திருச்சி பெல் வளாகத்தில் ஜூலை 6 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கும் எம்ஜிஆா் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்துவது,

அமைச்சா் செந்தில் பாலாஜியை தமிழக முதல்வா் ஸ்டாலின் பதவி நீக்கம் செய்ய வேண்டும்,

மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டில் திருச்சி மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான தொண்டா்கள் கலந்து கொள்வது, மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகா், பாலன், பொருளாளா் இளங்கோ, துணைச் செயலா் சுபத்ராதேவி, இணைச் செயலா் ரீனா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், பகுதி, சாா்பு அணி செயலா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Leave A Reply

Your email address will not be published.