திருச்சி தில்லைநகர் சாலை ரோடு விஸ்தரிப்பில் சிட்டி மருத்துவமனை அருகில் லிட்டில் மில்லினியம் மழலையர் பள்ளியை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடமுருட்டி சேகர் கலந்து கொண்டார்.
மேலும் டாக்டர்கள் சதீஷ்குமார், எம்.பிரபு குமார், கல்யாணி கவரிங் உமாநாத், KMS ஹக்கீம் பிரியாணி உரிமையாளர் ஹக்கீம், மொய்தீன், ஏ1 ஹோட்டல் ஆறுமுகபெருமாள், பனானா லீப் உரிமையாளர் மனோகரன், மல்லியம்பத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விக்னேஸ்வரன்,
குடமுருட்டி கரிகாலன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் தமிழ்செல்வன், ஸ்ரீதர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளியின் நிர்வாக இயக்குனர் பாலாஜி திறப்பு விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.