திருச்சி விமான நிலையம் அருகே
பணத்தை திருப்பி கேட்ட பைனான்ஸ் அதிபரை பெண்.
திருச்சி ஏர்போர்ட் ஸ்டார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52.). இவர் தினசரி வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்தார். இந்த நிலையில் திருச்சி கே.கே. நகர் ஓலையூர் பாலன் நகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சுந்தர் மகன் ஜோயல் ராஜ் (வயது 18) ரூ. 30,000 கடனாகப் பெற்றார். பின்னர் அவர் சரியாக கடனை திருப்பி செலுத்தவில்லை.
இந்த நிலையில் ஜோயல் ராஜ் தனது தாயார் விஜயலட்சுமியுடன் வயர்லெஸ் ரோடு பகுதியிலுள்ள ஒரு சிக்கன் கடை அருகாமையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த சுப்பிரமணி அவர்களிடம் சென்று வட்டிக்கு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ஜோயல் ராஜ் மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோர் சேர்ந்து பைனான்ஸ்காரர் சுப்பிரமணியை கீழே தள்ளி மிதித்து கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் ஜோயல் ராஜை கைது செய்தனர்.