வையம்பட்டி அருகே
தாய் திட்டியதால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி மணப்பாறை மலையடிப்பட்டி செபஸ்தியார் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகன் சாலமன் (வயது 29). பெயிண்டர் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த இரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை.
இதனால் மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் கஷ்டப்படுவதைக் கண்டு தாயார் சாலமனை கண்டித்தார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சாலமன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து அவரை தந்தை ஜெயபால் வையம்பட்டி போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.