கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 22 வட்ட திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.மேயர் தொடங்கி வைத்தார்
கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி திருச்சி தில்லை நகரில் உள்ள கி.ஆ.ப.விஸ்வநாதம் பள்ளியில் திமுக 22-வது வட்ட தி.மு.க மற்றும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமை மாநகராட்சி மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழுதலைவர் விஜயலட்சுமி கண்ணன், தில்லைநகர் பகுதி செயலாளர் கே.எஸ்.நாகராஜன்,தில்லை நகர் கண்ணன், தில்லை மெடிக்கல் மனோகரன், 22-வது வட்டக் செயலாளர் வாமடம் சுரேஷ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
இம்முகாமில் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.