கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஓர் ஆண்டு முழுவதும் கொண்டாட மத்திய மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை
ஆண்டு முழுவதும் கொண்டாட
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு ஜூன் 3ஆம் தேதியிலிருந்து ஓர் ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் மாவட்ட அவை தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமையில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர், மேயர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருகிற 3-ந்தேதி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மத்திய மாவட்டம் முழுவதும் கழக கொடி ஏற்றி,கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அடுத்த பிறந்தநாள் வரை ஓர் ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.பரணிக்குமார், துணைச்செயலாளர்கள் விஜயா ஜெயராஜ், முத்து செல்வம், சேர்மன் துரைராஜ், ஒன்றியச்செயலாளர்கள் கதிர்வேல், மாத்தூர் கருப்பையா, பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ, ராம்குமார், நாகராஜன், கமால் முஸ்தபா, கனகராஜ்,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, தில்லைநகர் கண்ணன், இளைஞரணி ஆனந்த், பி.ஆர்.சிங்காரம், டோல்கேட் சுப்பிரமணி, ஜாபர்அலி, எம்.ஏ.எஸ்.மணி, ஸ்ரீரங்கம் ஜெயக்குமார், கவுன்சிலர்கள் கலைச்செல்வி,
புஷ்பராஜ்,அயிலை எம்.பி.குமரவேல், துரைப்பாண்டியன், மூவேந்திரன், சதீஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் புத்தூர் தர்மராஜ், அயூப் கான், கிராப் பட்டி செல்வம், சர்ச்சில், தொ.மு.ச.குணசேகரன்,மாவட்ட, மாநகர அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.