Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரை பகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

0

 

திருச்சி பாலக்கரையில்

திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.

2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்த பணிகளை மேற்கொள்ள திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் மார்க்கெட் பகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாலக்கரையில் பகுதி செயலாளர் ஆர்.ஜி.பாபு தலைமையில் நடந்தது. பகுதி அவைத் தலைவர் முகமது சிராஜ் வரவேற்றார். கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,
பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை தென் மேற்கு மாவட்ட செயலாளர் மயிலை வேலு எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அ.த.த.செங்குட்டுவன், லீலாவேலு, மூக்கன், வட்டச் செயலாளர்கள் மனோகரன், சுப்பிரமணி, சிலம்பரசன், பாண்டியன், வேலுமணி, சாதிக் பாட்ஷா, சுருளிராஜன், செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மார்க்கெட் பகுதி துணைச் செயலாளர் பைரவன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் அனைவரும் ஒன்றுபட்டு, கடுமையாக உழைத்து 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.