அமமுக திருச்சி மாவட்ட செயலாளராக செந்தில்நாதன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நாளை எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் அவர்களால், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக 47 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் அவர்கள் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து
கழக தலைமை நிலைய செயலாளர், செய்தி தொடர்பாளர், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் KVD கலைச்செல்வன் ,மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில்
நாளை வெள்ளிக்கிழமை காலை 21.05.2023 காலை 10:00 மணிக்கு, கோர்ட்டருகே அமைந்துள்ள டாக்டர் எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அதுசமயம் மாநில நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,மகளிரணி நிர்வாகிகள்,பகுதி கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள்,நகர கழக நிர்வாகிகள்,வட்ட கழக நிர்வாகிகள்,பேரூர் கழக நிர்வாகிகள்,ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.