Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தொழிலாளிடம் கத்தி முனையில் பணம் செல்போன் பறித்த 2 பேர் கைது, 3 பேருக்கு வலை.

0

 

திருச்சியில் தொழிலாளிடம் கத்தி முனையில் பணம்,செல்போன் பறித்த ரவுடி உள்பட 2 பேர் கைது.

திருச்சி திருவானைக்கோவில் அழகிரிபுரம் 3-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் தனபால் (வயது 26). இவர் சிமெண்ட் கல் தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் திருச்சி சென்னை பைபாஸ் ரோடு ஒய் ரோடு ஜங்ஷன் பகுதியில் வந்த போது 5 பேர் கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் ரூ.1000 மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து தனபால் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் திருவானைக்கோவில் பள்ளிவாசல் பின்புறம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சித்திக், திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சேர்ந்த முகேஷ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் தலைமுறைவாக இருக்கும் பாரதி தெரு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் உள்ளிட்ட மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.