Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் வீட்டில் அனைவரும் தூங்கி நேரத்தில் வீடு புகுந்து நகைகள் கொள்ளை.

0

 

ஸ்ரீரங்கத்தில் வீட்டில் அனைவரும் தூங்கிய நேரத்தில்
வீடு புகுந்து
நகைகள் கொள்ளை.

திருவரங்கம் வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் பாலாஜி (வயது 50). இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அனைவரும் கடந்த 4-ந் தேதி இரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பாலாஜியின் தந்தை ரங்கநாதன் முழித்துப் பார்த்தார் .
அப்போது சத்தம் கேட்டது. உடனே அவர் எழுந்து பார்த்தபோது வீட்டில் ஒரு மர்மநபர் ஓடுவது தெரியவந்தது.

வீட்டிற்குள் லைட்டை போட்டு பார்த்தபோது 3 சவரன் செயின்,1 3/4 சவரன் நெக்லஸ், 1/2 சவரன் தங்க மோதிரம், டைமண்ட் மூக்குத்தி மேல் ஆறரை சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.