Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்களுக்கான கோடை பயிற்சி முகாம் தொடக்கம்.

0

 

ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் நேற்று ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

6 வரை நடபெற இருக்கும் இந்த முகாமில், இரண்டு பயிற்ச்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

1. MIND GYM என்ற பெயரில் மாணாக்கர்களின் வலது மூளை செயல் திறனை அதிகரிக்கும் பயிற்சிகளும், தன்னம்பிக்கையுடன் தலைமை பொறுப்பேற்று, குழுவாக இணைந்து செயல்படும் பயிற்சியும்

2. EXPOSURE TO DIGITAL WORLD என்ற மற்றொரு நிகழ்வில், மாணாக்கர்களின் படிப்புத் திறன் அதிகரிக்கும் வகையில், எமது DIGITAL LIBRARY மூலம் கோடிக்கணக்கான புத்தகங்களை பயிலும் வாய்ப்பு ஏற்படுத்த படுகிறது.

இந்த பயிற்சி முகாமில் மாணவர்கள், பெற்றோர் சம்மதத்துடன் இந்த நிகழ்சிகளில் பங்கேற்றார்.

ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் உறுப்பினர்களான குமார் மற்றும் செல்வராஜ் இந்த நிகழ்சிகளை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.

01-05-2023 அன்று, ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் தலைவர் நந்தகுமார் தலைமையில், செயலர் கஸ்துரிரங்கன் துவக்கி வைத்தனர்.

உறுப்பு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்க, மீனலோசனி நன்றியுரை ஆற்றினார்.


பயிற்சி முகாம் முடிவு நாள் அன்று (06-05-2023) ஸ்ரீர்ங்கம் கல்வி குழுமத்தின் உறுப்பினர் வரதராஜன் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

குமார் நிகழ்வுகளின் தொகுப்புரை அளிக்க, செல்வராஜ் நன்றியுரையுடன் கோடை வகுப்புகள் முடிவுறுகின்றன.

தொடக்க நாள் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் புவனேஸ்வரி,
பெருமாள், சத்திய நாராயணன்.
சைவ ராஜு மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.