திருச்சியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
திருச்சி பாலக்கரை பீமநகர் பஞ்சுக்கிடங்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43) இவர் தனது வீட்டின் அருகில் உள்ள 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அந்த சிறுமியின் தாய் கண்டோன்மென்ட் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.