Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: பெரியார் ஈவேரா கல்லூரி விடுதி மாணவர்கள் தர்ணா போராட்டம்.

0

 

திருச்சி தந்தை பெரியார் ஈவேரா அரசு கலைக் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கி படத்து வருகின்றனர்.

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மற்றும் இதர மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ஊக்கத்தொகை ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும்.

ஆனால் நடப்பு கல்வி ஆண்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும், விரைவில் தேர்வு நடைபெற உள்ள சூழலிலும் இதுவரையிலும் அவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படாததால்
இன்றைய தினம் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் இதுவரையிலும் அவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தொகை வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.