அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று,
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி முன்னிலையில்,
ஓ.பி.எஸ் அணியின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் வழக்கறிஞர் கு.கவிதா தலைமையில் உப்பிலியபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பெருமாள், அவைத் தலைவர் செல்வராஜ், இணைச்செயலாளர் கலாமணி, துணை செயலாளர்கள் ராஜ்குமார், நந்தினி, மாவட்ட பிரதிநிதிகள் சரிதா, விஜயகுமார், ஊராட்சி கழக செயலாளர்கள் வைரிசெட்டிபாளையம் சந்திரசேகர், வெங்கடாசலபுரம். நந்தகுமார் உட்பட 20க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் அணியினர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் உப்பிலிபுரம் தெற்கு கழக செயலாளர் அழகாபுரி செல்வராஜ், உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராம்மோகன், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன், உப்பிலியபுரம் பேரூராட்சி கழக செயலாளர் ராஜாங்கம், முசிறி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.