திருச்சி ஜி. கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் மாநாட்டிற்கான கால் கோள் நடும் விழா இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது.
திருச்சியில் இன்று அதிகாலை பூஜையுடன் ஓபிஎஸ் மாநாட்டிற்கான பந்தக்கால் நடப்பட்டது.
திருச்சியில் வருகின்ற 24 ஆம் தேதி ஓபிஎஸ் அணி சார்பில் டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஜி கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது.
இதற்காக மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்காக இன்று அதிகாலை பூஜையுடன் கால் கோள் எனப்படும் பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறுகையில்:-
24 ஆம் தேதி நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழக முழுவதும் இருந்து அதிமுகவின் உண்மை தொண்டர்கள் வந்து மாநாட்டை சிறப்பிக்க வேண்டும்.
திருச்சி என்றாலே திருப்புமுனை தான் அந்த திருப்புமுனை தான் எங்களுடைய அரசியல்.
எங்களுடைய அரசியலை இந்த திருப்புமுனை அரசியலை பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் நடைபெற்ற இந்த ஜீகார்னர் மைதானத்தில் இருந்து ஆரம்பிக்கிறோம். இனி எங்களுக்கு எல்லாம் வெற்றியாகவே அமையும் எனவே இந்த மாநாட்டிற்கான ஆரம்ப பணிகள் துவங்குவதற்கு முன்பு இன்று காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், மாவட்ட செயலாளர்கள் ராஜ்மோகன்,
சாமிக்கண்ணு,
முசிறி ரத்தினவேல், திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார், திருச்சி மாநகர் மாவட்ட பேரவை செயலாளர்
வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு,நிர்வாகிகள் ஜோதிவாணன், தாயார் சீனிவாசன், திருநாவுக்கரசு, ஆர்.சி. கோபி,கணேசன் சந்து கடை சந்துரு,விசா மற்றும் திரளானவர் கலந்து கொண்டனர்.