புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் சகானா (வயது 19).
இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி 2ம் ஆண்டு பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.
கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது தந்தை முருகானந்தம் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு மாயமான கல்லூரி மாணவி சஹானாவை தேடி வருகிறார்.