Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தெற்கு மாவட்டத்தில் திமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

0

 

தலைமை கழக பார்வையாளர்கள் முன்னிலையில்

திருச்சி தெற்கு மாவட்டத்தில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திமுகவில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தி இருந்தார்.

அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் கலைஞர் நகர் பகுதியில் திமுகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமினை திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தலைமை கழக தொகுதி பார்வையாளர்கள் பிரகாஷ், மறைமலை, அசோக் பாண்டியன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மண்டல குழு தலைவருமான மதிவாணன் வரவேற்று பேசினார். தொடர்ந்து மணப்பாறை, திருவெறும்பூர் தொகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது..

இந்த முகாமினை திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இதில் புதிதாக பதிவு செய்ய வந்தவர்கள் பெயர், முகவரி, விவரம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஆகியவற்றின் ஜெராக்ஸ் இணைத்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,
இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து திமுகவில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், ராஜ்முஹம்மத் ஏ. எம்.ஜி.விஜயகுமார் பாபு மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.