Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உலக நாடக தின கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது

0

'- Advertisement -

 

திருச்சியில் உலக நாடக தின கலந்துரையாடல் நிகழ்ச்சி.

Suresh

உலக நாடக தினத்தையொட்டி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட திரைக் கலைஞர் சங்கம் சார்பில் தில்லைநகர் டுவலைட் டான்ஸ் ஸ்டுடியோவில் உலக நாடக தின கலந்துரையாடல் நிகழ்ச்சி
நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திரைக் கலைஞர் சங்கத் தலைவர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் சிவ.வெங்கடேஷ் தனது துவக்கவுரையில், நாடக நாள் கொண்டாடுதல், உருவாக்கம், நாடக வரலாறு, நாடக கலைஞர்கள் சமூகத்தில் ஆற்றிய பங்களிப்பு, நாடகத்தில் பெண் கலைஞர்களின் பங்களிப்பு, குறிப்பாக விடுதலைப் போராட்ட வீராங்கனை கே.பி. ஜானகி அம்மாள் வரலாறு குறித்துப் பேசினார் .
தினேஷ் மோனோ ஆக்டிங் செய்து காண்பித்தார். நிகழ்ச்சியை விஜய் ஒருங்கிணைத்தார்.
முன்னதாக செயலாளர் லாரன்ஸ் வரவேற்றார். முடிவில் பொருளாளர் மு. சந்துரு நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.