திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில்
டிப்ளமோ பட்டதாரி உட்பட இரண்டு பேர் தற்கொலை.
திருச்சி கீழ அம்பிகாபுரம் இந்திரா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெபஸ்டின். இவரது மகன் சாம்சங் டேனியல் (வயது 21) டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.
இவர் தனது தந்தையின் சமையல் எரிவாயு அடுப்புகள் பழுது நீக்கும் கடையில் ஒத்தாசையாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மகனின் விருப்பத்திற்கு மாறாக ஆரோக்கிய சபஸ்டின் இன்னொரு கடையை அவருக்கு வாடகைக்கு பிடித்துள்ளார்.
இதனை டேனியல் விரும்பவில்லை இந்த நிலையில் மன வேதனை அடைந்த டேனியல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஃபேன் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து ஆரோக்கிய சபஸ்டின் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதே போன்று பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சகோதரி வீட்டில் தங்கியிருந்த தொழிலாளி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரோடு கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனகராஜ் (வயது 52) இவர் திருச்சி பாலக்கரை ஆட்டுக்கார தெரு பகுதியில் வசிக்கும் தனது சகோதரி கலாவதி வீட்டிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தார். பின்னர் சகோதரி வீட்டிலேயே தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கலாவதி வீட்டில் இருந்து வெளியே சென்றார் அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜனகராஜ் தனது வேட்டியில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கலாவதி கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.