தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர் சங்கத்தின் போராட்டக் கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் போராட்ட கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் வாலண்டின் பிரிட்டோ தலைமை தாங்கினார். கணக்கு மேலாளர் சக்திவேல், கட்டிட பொறியாளர் மாரியப்பன், மாநில பொதுச் செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் மகாலிங்கம் விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பால்பாண்டி வாழ்த்துரை வழங்கினார்.
அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் செல்வம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்களையும் கல்வித்துறையோடு இணைத்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணி நிரந்தரம் பெறுவதற்காக போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.