குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்த திருச்சி ஆட்டோ டிரைவர் சுடுதண்ணீர் ஊற்றி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மனைவி, மாமியார் கைது செய்யப்பட்டனர் .
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வராஜ் (வயது27). அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மனைவி டயானா மேரி (வயது 22), மாமியார் இன்னாசியம்மாள் (வயது 40) ஆகியோர், கடந்த, 6ம் தேதி செல்வராஜ் மீது கொதிக்கும் சுடுநீரை ஊற்றினர்.இதில் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் செல்வராசை
துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேற்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தலையில் செல்வராஜ், இன்று காலை சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி திருவெறும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக இறந்து போன ஆட்டோ டிரைவர் செல்வராஜின் மனைவி, மாமியார் ஆகியோரை கைது செய்து திருவெறும்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.