Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் குட்டி குடி திருவிழா.

0

 

நாளை திருச்சி புத்தூர்
குழுமாயி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா.

திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் அமைந்து உள்ளது குழுமாயி அம்மன் கோவில். இங்கு குட்டிக்குடித்தல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் (பிப்ரவரி) 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு 11.30 மணிக்கு கோவிலில் இருந்த அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு தன்னக்காடு, வண்ணாரப்பேட்டை, அரசு மருத்துவமனை வழியாக புத்தூர் நால்ரோட்டுக்கு வந்தார்.

அதன்பின் புத்தூர் மந்தைக்கு நள்ளிரவு 2 மணிக்கு அம்மனை பக்தர்கள் அழைத்து வந்தனர். பின்னர் அதிகாலை 5 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) சுத்த பூஜை நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடித்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.