திருச்சியில் இன்று காலை
டிப்பர் லாரி மோதி பெண் வங்கி ஊழியர் உடல் நசங்கி சாவு.
கணவன் கண் முன்னே சம்பவம்

திருச்சி சுப்பிரமணியபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பிரியங்கா (வயது 39) இருவரும் கருமண்டபம்,பொன் நகர் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வேலைக்கு செல்ல புறப்பட்டு சென்றனர் காலை 9.45 மணியளவில் பிரபு ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருச்சி மன்னார்புரம் பி என் டி காலனி அருகே வரும் பொழுது இவர்களை பின் தொடர்ந்து வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் பின்புறத்தில் அமர்ந்த பிரியங்கா நிலை தடுமாறு கீழே விழுந்தார்.இதை தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் டிப்பர் லாரி பிரியங்கா மீது மோதி உடல் நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
பிறகு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரியங்காவை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். இந்த விபத்து சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.கணவன் கண் முன்னே மனைவி லாரியில் அடிப்பட்டு உடல் நசுங்கி இறந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.