திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்
மகள் வீட்டிற்கு வந்த மூதாட்டி திடீர் மாயம்..
திண்டுக்கல் நாகல் நகர் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி மாரி கண்ணு. ( வயது 60). இவரது மகள் வீடு திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ளது. கடந்த 18-ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்த மாரிகண்ணு மகள் வீட்டிற்கு ஆட்டோவில் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது மகன் ஆறுமுகம் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.