திருச்சி விமான நிலையத்தில்
நகைகளுடன்
2 வாலிபர்கள் சிக்கினர்.
திருச்சி விமான நிலையம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஏர்போர்ட் பஸ் ஸ்டாப் மற்றும் வயர்லெஸ் ரோடு சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் உரிய ஆவணங்களின்றி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சிவகங்கை தேவகோட்டையைச் சேர்ந்த ஜீவகன் என்பவரிடம் வளையல்கள், தங்க செயின், மோதிரம் உள்பட 78 கிராம் தங்க நகைகளும், திருச்சி பெரிய கடை வீதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரிடம் 180 கிராம் மதிப்புள்ள தங்கச் செயினும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர் .
விசாரணைக்கு பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.