Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.

0

 

திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.

திருச்சி திருவானைக்கோவில் நெல்சன் ரோடு பர்மா காலனி சேர்ந்தவர் காளிதாஸ் மகன் கார்த்திக் (வயது 29). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் ஆகாத விரக்தியில் கார்த்திக் நேற்று தூக்கு போட்டுக் கொண்டார்.

இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.