Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று பட்டப்பகலில் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் மகன் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை.

0

 

திருச்சி அரியமங்கலத்தில் பட்டப் பகலில் இன்று பயங்கரம்:

அதிமுக முன்னாள் பகுதி செயலாளர் மகன் வெட்டி கொடூரக் கொலை.

துப்பாக்கி, அருவாளுடன் வந்த மர்மகும்பல் தப்பி ஓட்டம்.

திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் பகுதி செயலாளர் மகன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அரியமங்கலத்தில் இன்று பட்டப் பகலில் நடந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர் .இவர் முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும்
, அவரது மனைவி கயல்விழி திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தனர்.

இவர்கள் கேபிள் தொழில் மற்றும் பைனான்ஸ் செய்து வருகின்றனர்.
பன்றியும் வளர்த்து வருகின்றனர். கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் (வயது 27).டிப்ளமோ இன்ஜினியர்.பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும் கேபிள் சேகரின் சகோதரர் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் தொடர்ந்து இருந்து வருகிறது.தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் அன்றிலிருந்து இன்று வரை இந்த முன் விரோதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கேபிள் சேகர் முன் விரோதம் காரணமாக கடந்த 2011- ம் ஆண்டு வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கேபிள் சேகரின் அண்ணன் பெரியசாமியின் மனைவி பார்வதி, மகன்கள் தங்கமணி, சிலம்பரசன் மற்றும் பிரபல ரவுடிகள் பாஸ்கர், ஜெயச்சந்திரன், நாகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த பரத்குமார், சதாம் உசேன் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இரு குடும்பத்தினருக்கும் தொடர்ந்து முன் விரோதம் இருந்து வந்தநிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு பெரியசாமியின் மகனும், பிரபல ரவுடியுமான சிலம்பரசன் (வயது 35) அவரது வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக
அரிமயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று கரூர் ஜே.எம்.-2 குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் திருச்சி மேலஅம்பிகாபுரம் அண்ணாநகரை சேர்ந்த முத்துகுமார் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த சரவணன்(27) மற்றும் அரியமங்கலத்தை சேர்ந்த காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெகநாதபுரம் ரஞ்சித் (19), அரியமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கோபிநாத் (20) ஆகிய 4 பே சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நிதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், அவர்கள் 4 பேரும் கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில்
திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை சுமார் 11 மணியளவில் பட்டப் பகலில் முத்துக்குமார் நடுரோட்டில் சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கியுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகர அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி மற்றும் முன் உருவாக்கத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இவன் பேரில் போலீசார் விசாரணையில் தீவிர படுத்தியுள்ளனர்.
இதன் பேரில் போலீசார் விசாரணையில் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இறந்து போன முத்துக்குமார் மீது கொலை வழக்கு, அடிதடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது .
இறந்து போன முத்துக்குமாருக்கு ஒரு சகோதரனும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி அரியமங்கலத்தில் இன்று பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.