காவலர் விருது பெற்றவர்களுக்கு
திருச்சி காவல் ஆணையர் பாராட்டு.
தமிழக முதலமைச்சரின் காவலர் விருது பெற்ற திருச்சி மாநகர காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு காவல் ஆணையர் எம். சத்தியப்பிரியா வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்.
தமிழக காவல்துறையில் 15 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி செய்தமைக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கம் அண்மையில் வழங்கப்பட்டது.
இதில், திருச்சி மாநகர காவல்துறையில் 5 சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட மொத்தம் 61 பேர் விருது பெற்றிருந்தனர். அவர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் எம். சத்தியப்பிரியா நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.
எதிர்வரும் காலங்களில் மென்மேலும் சிறப்புடன் பணி செய்து திருச்சி மாநகர பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்தும், தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் விளங்கவேண்டும் என விருது பெற்றவர்களுக்கு ஆணையர் அறிவுரை கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார்.