Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மணப்பாறை: வரதட்சணையாக 100 பவுன் கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு.

0

 

மணப்பாறை:
100 பவுன் நகை கேட்டு வரதட்சணை கொடுமை
9 பேர் மீது வழக்கு.

திருச்சி மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி கலிங்கப்பட்டி கீரணிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவருக்கும் மருங்காபுரி சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (வயது 29) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது நகை பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் கணவர் ஜீவானந்தம், மாமியார் சரஸ்வதி மற்றும் உறவினர்கள் சின்னையன், குமார்,மகாலட்சுமி, கவிதா, கோமதி, பாலசுப்பிரமணியன் வடிவேல், கலையரசி ஆகிய 10 பேரும் முத்துலட்சுமியிடம் 100 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரொக்க பணம் கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் இந்த அளவுக்கு மீண்டும் நகை பணம் எனது பெற்றோரால் தர இயலாது. அந்த அளவுக்கு வசதி இல்லை என எடுத்து கூறியுள்ளார். இருந்தபோதிலும் அவரைத் தொடர்ந்து கணவர் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முத்துலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ஜீவானந்தம் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.