ஆம்புலன்ஸ்க்கு வழி விட ஆட்டோ டிரைவர்.
தட்டி கேட்ட வன அதிகாரியை கல்லால் தாக்கிய 2 வாலிபர்கள் மீது
வழக்கு பதிவு.
திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் வயது 47 இவர் வனச்சரக அலுவலராக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வடக்கு தாராநல்லூர் கம்பி போட்ட பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் நோயாளியுடன் வேகமாக வந்தது அப்போது ஒரு ஆட்டோ இடையூறாக அந்தப் பகுதியில் நின்றதை கண்ட சுரேஷ்குமார் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுமாறு அந்த ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் அதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த தாராநல்லூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத் மற்றும் அவரது நண்பர் பாரதி ஆகிய இருவரும் வனச்சரக அலுவலர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரது தலையில் கல்லால் தாக்கி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது
இது தொடர்பாக சுரேஷ்குமார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வினோத், பாரதி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.