Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

2வது கள்ளக்காதலனால் கொல்லப்பட்ட திருச்சி ஜல்லிக்கட்டு வீரர். (3வது கள்ளக்காதலன்). பரபரப்பு தகவல்.

0

 

கள்ளக்காதல் தொடர்பில் ஜல்லிக்கட்டு வீரர் கொலை.போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆலம்பட்டி என்ற கிராமத்தில் கொல்லாப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளம் உள்ளது.

இந்த குளத்தில் கடந்த 9-ந்தேதி இரவு ஆண் சடலம் ஒன்று கிடந்தது குறித்த தகவலறிந்த
தீயணைப்பு படையினர், குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் மிதந்தவரின் உடலை மீட்டனர். இறந்தவரின் விபரம் பற்றி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர், திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த மணி (வயது 23) என்றும், அவர் ஜல்லிக்கட்டு வீரர் என்பதும் தெரியவந்தது. அவரை கை, கால் மற்றும் வாயை கட்டி கொடூரமாக கொலை செய்து உடலில் கல்லை கட்டி குளத்தில் வீசி இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வீரர் மணியை கொலை செய்தது தொடர்பாக கருங்குளத்தை சேர்ந்த ஒரு பெண் மற்றும் கரூரை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில் கூறியதால் அவர்கள் மீது போலீசார் சந்தேகமடைந்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அதில் மணியை கொலை செய்தது தொடர்பாக பாலசுப்பிரமணி (வயது47), அவரது மகன் பரத்ராஜ் (வயது19), சுரேஷ் (42) மற்றும் கருங்குளத்தை சேர்ந்த மூக்காயி (வயது 33) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி மூக்காயி. பாலசுப்பிரமணி குடும்பத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக கரூருக்கு சென்றார். அப்போது கரூரில் வசித்து வரும் மற்றொரு பாலசுப்பிரமணியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் பாலசுப்பிரமணியிடம் கடனாக மற்றொரு பாலசுப்பிரமணி பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வசூல் செய்வதற்காக அவர், பாலசுப்பிரமணி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது மூக்காயிக்கும், மற்றொரு பாலசுப்பிரமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த பாலசுப்பிரமணி தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் கருங்குளத்துக்கு குடியேறினர். இதனால் அவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்ய கருங்குளத்தில் உள்ள ஜல்லிக்கட்டு வீரர் மணியிடம், மற்றொரு பாலசுப்பிரமணி கூறியுள்ளார். அதன்படி மூக்காயி வீட்டுக்கு சென்று மணி பணத்தை வசூல் செய்துள்ளார். இதில் மூக்காயியுடன் மணிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது மற்றொரு பாலசுப்பிரமணிக்கு தெரியவந்தது. இதனால் மணியை தீர்த்து கட்ட அவர் முடிவு செய்ததாகவும், இதைத்தொடர்ந்து கரூரில் மணிக்கு வேலை வாங்கி தருவதாக பாலசுப்பிரமணி கூறியுள்ளார். இதை நம்பி கடந்த 4-ந்தேதி மணி கரூர் சென்றார்.
அங்கிருந்து பாலசுப்பிரமணி, அவரது மகன் பரத்ராஜ், உறவினர் சுரேஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மணியை ஒரு வேனில் குஜிலியம்பாறை அருகே கோட்டாநத்தத்தில் உள்ள கொடியரசு என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவரை சரமாரியாக தாக்கினர். இதில் மயங்கிய மணியை ஒரு சாக்குமூட்டையில் கட்டி அவரை ஒரு வேனில் வைத்து குஜிலியம்பாறை அடுத்த கொல்லப்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி குளத்திற்கு கொண்டு வந்து அங்கு மணியின் கை, கால்கள் மற்றும் வாயை கட்டி, கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் உடலில் கல்லை கட்டி குட்டையில் தூக்கி வீசி சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மூன்றாவது கள்ளக்காதலனை இரண்டாவது கள்ளக்காதல் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.