திருச்சி மாவட்ட அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் 19-வது மாவட்ட மாநாடு.முன்னாள் எம்எல்ஏ கதிரவன் பங்கேற்பு.
திருச்சி மாவட்ட
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 19-வது மாவட்ட மாநாடு.
அகில இந்திய துணைத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ கதிரவன் பங்கேற்பு.
திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திருச்சி மாவட்ட மாநாட்டிற்கு மாவட்ட பொதுச் செயலாளரும்,
மாநில செயலாளருமான வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் முருகையா தேவர்,மாநில பொதுக்குழு உறுப்பினர் காசிமாயத்தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர செயலாளர் வெற்றி, மாவட்ட பொருளாளர் பூர்ணா குமார், மாவட்ட துணை தலைவர் விஜய் தீபன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கிரி ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளரும், அகில இந்திய துணைத் தலைவருமான முன்னாள் எம்எல்ஏ கதிரவன், மாநில தலைவர் முத்துராமலிங்கம், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முடிவில் நடராஜன், ரவிசங்கர் ஆகியோர் நன்றி கூறினர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் சிவக்குமார், ராமசாமி, மலர் ரவி, மணிகண்டன், ஆனந்த், தினேஷ், மாலைத்துரை, சார்லஸ் சாமி, நல்லு செந்தில், பழனிவேல், அன்பு பிரேம், பிரபாகரன், கலைச்செல்வன், சுதர்சன், ராஜசேகரன், சத்யா, பிரவீன், மது தேவர், லட்சுமி நாராயணன், கிஷோர், தமிழ்மாறன், ராமர், பீம நகர் மணி, கிராப்பட்டி ஜெய், பெரிய மிளகு பாறை சிவா, சாத்தனூர் ரவி, மன்னார்புரம் சண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாவட்ட மாநாட்டில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.