Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் திருநாவுக்கரசு எம்பி வழங்கினார்.

0

 

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
திருநாவுக்கரசர் எம்.பி வழங்கினார்.

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக கொண்டாடப்பட்டது .

இவ்விழாவில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார் .அப்போது அவர் பேசுகையில், தனது எம்.பி மேம்பாட்டு நிதியிலிருந்து இது வரை 68 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் மற்றும் பல்வேறு உபகரணங்களை வழங்கியதை கடவுளுக்கு செய்யும் தொண்டாக கருதுகிறேன் என்றார். மேலும் வரும் நிதியாண்டில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேலும் பல நலத்திட்ட உதவிகளை கடவுளின் குழந்தைகளான உங்களுக்கு செய்ய காத்திருக்கிறேன் என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர் சோபியா விமலா ராணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.