திருச்சியில் நடைபெற்ற லோக் ஜனசக்தி செயற்குழு கூட்டத்தில் ராம் விலாஸ் பாஸ்மானுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தீர்மானம்.
ராம் விலாஸ் பாஸ்மானுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சியில் தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் | மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வித்யாதரன் தலைமையில் திருச்சி அருண் ஒட்டலில் நடைபெற்றது. நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகர்,முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.
கூட்டத்தில் ராம் விலாஸ் பாஸ்வான் க்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.
நீதிபதிகளை நியமனம் செய்யும் போது தேர்வாணையம் ஏற்படுத்தி அதன் மூலம் நீதிபதிகள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்று மத்தியஅரசை கேட்டுக் கொள்வது.
பட்டியல் இன, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு பணியாளர்களுக்கு பல்வேறு துறைகளில் ஆட்களை தேர்வு செய்யும் போது தமிழ்நாட்டில் உள்ள பணிகளுக்கு தமிழ்நாடு மனுதாரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.