Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் மயங்கி விழுந்து இறந்த வட மாநில லாரி டிரைவர்,கஞ்சா விற்ற மூதாட்டி,மின்சாரம் தாக்கி இறந்த எலக்ட்ரிஷன் உள்ளிட்ட கிரைம் செய்திகள்

0

1)
அரியமங்கலத்தில்
வட மாநில லாரி டிரைவர் மயங்கி விழுந்து சாவு.

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டம் தபாஷர்வர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சத் சாயல் (வயது 24) இவர் பிரபல கூரியர் கம்பெனியில் கண்டெய்னர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பின் சென்னையிலிருந்து திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு திருச்சியில் லாரி ஓட்டி வந்தார்.இந்த நிலையில் திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள கூரியர் அலுவலகம் அருகில் லாரியை நிறுத்திவிட்டு அங்கு படுத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்காமல் மயங்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சஞ்சித் சாயலை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2)
எடமலைப்பட்டி புதூரில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகில் மில் காலனி மாரியம்மன் பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டு இருப்பதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதை யடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ஜான்ட் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பார்த்த போது திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அண்ணாவி என்பவரது மனைவி சின்ன பொண்ணு (வயது 70) என்பவர் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்ததை பார்த்தனர்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சின்னப்பொண்ணுவிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

3)
திருவரங்கரத்தில்
பெண் மயங்கி விழுந்து சாவு

திருவரங்கம் திருவளர்ச்சோலை மேல தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்.இவரது மனைவி ரேவதி (வயது 55)உடல் நிலை சரியில்லாமல் இருந்த ரேவதி சம்பவத்தன்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ரேவதி ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4)
திருச்சியில்
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

திருச்சி தென்னூர் குத்பாஷா நகரை சேர்ந்தவர் ஆசிக் அலி.. இவரது மகன் ஆசிப் (வயது 25) எலெக்ட்ரிசன்.
இவர் தனது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து அவரை உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஆசிப் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.